Wednesday, 4 December 2013

தொடரும் யாசகங்கள்...


சாம்பல் காடுகள் எங்கும் பூக்கள் வீசும் கருகும் வாசம்.
இருளறியாப் புன்னகையோடு ஓநாய்கள் ஒலிக்கும் தேசிய கீதம்.
வாங்கப்பட்ட கனவுகளின் விலையாய் சுமை கூலி. அதுவும்,
மிச்சமின்றி விதைக்க வேண்டிய விளையாப் பயிர்.
வேண்டிய அமைதி நிலவுகிறது, கடும் யுத்தத்திற்கு பின்பான களமாய்.
வழியும் துளிகளில் தெரியும் எதிர்த் திசையில் சுழலும்
உலகின் பிம்பம், மாறவும் மாற்றவும் போவதில்லை.
இரவுப் பறவைகளின் திசையை அவைகளே தீர்மானிக்கும்
எனில் நாளையும் தொடரும் யாசகங்கள், கிழக்கு நோக்கியே.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home