மூட் மந்திரம்
கொஞ்சம் அழவேண்டியிருந்தது.
மௌனமாய் கண்ணீர் வடிக்கும் வகையிலில்லை.
ஹாலில் அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாய்
பதவியேற்றுக்கொண்டிருந்தார்.
ஒரே சாக்லேட் காகிதத்திற்காய் போர் மூளும் சாத்தியம்
இன்னொரு மூலையில்.
“இப்படித்தான்
பாகு எடுக்கணும் பாத்துக்கோ”
பார்த்துக்கொண்டேயிருந்தாள்.
“Aunty one hug!” ஓடி வந்த மூன்றரை,
வழக்கத்தை அனுசரித்தது, கையைவிரித்து.
அள்ளி உச்சி முகர்கையில் அவள் சிரித்துக்கொண்டிருந்தாள்!
Labels: Kavithaigal

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home