Tuesday 1 April 2014

நிலை மாற்றம்

எல்லையற்றப் பெருவெளியில் நீ நிறைந்ததுபோலவே நானும்.
எனக்குள்ளும் நீ உண்டு... நானாய்.
தடுமாறி திக்கற்றுப் போகையிலும்
தொலைதூரப் பரவச வெளிச்சமாய் நீ.

நீ என்பதும் நான்தானே!
கடவுளென்றா அழைக்க உன்னை!

அறிவிலியாய் துயருற்று...
அமிழ்ந்ததாய் உணர்ந்தபோது...
நிரந்தரமல்ல என்றழைத்தாய்..
கரம் பற்றி களித்திருந்தேன்...

இன்னும் கொஞ்சம் உயரமாய் கூட்டிப்போனாய்.
இப்போது புன்னகையற்றுப் போனது. துயரமும்.
விருப்பமும் வெருப்புமில்லை.. உன்மீதும்.
நிரந்தரம், அற்றது பற்றி கவலைகூட.


மாறியிருக்கிறேன் நான்... நீயாய். போதும்.