Monday 30 December 2013

மூட் மந்திரம்


கொஞ்சம் அழவேண்டியிருந்தது.
மௌனமாய் கண்ணீர் வடிக்கும் வகையிலில்லை.

ஹாலில் அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாய்
பதவியேற்றுக்கொண்டிருந்தார்.

ஒரே சாக்லேட் காகிதத்திற்காய் போர் மூளும் சாத்தியம்
இன்னொரு மூலையில்.

இப்படித்தான் பாகு எடுக்கணும் பாத்துக்கோ
பார்த்துக்கொண்டேயிருந்தாள்.

“Aunty one hug!” ஓடி வந்த மூன்றரை,
வழக்கத்தை அனுசரித்தது, கையைவிரித்து.

அள்ளி உச்சி முகர்கையில் அவள் சிரித்துக்கொண்டிருந்தாள்!

Friday 27 December 2013

உறக்கம்



முருங்கைக்கீரை ஆய்ந்து கொண்டிருந்தவள் கையைச்
சட்டென்று பற்றி இழுத்து வந்தன அவ்வார்த்தைகள்.
கடும் பசியில் இருப்பதாய்ச் சொல்லின.
வேடிக்கை, விளையாட்டு, மழலை பேசச்சொல்லி,
ஆதி அந்த தத்துவங்களைக்கேட்டு,
உண்மையையும் இன்மையையும் ,
அழகையும் அல்லாதவைகளையும் பாடச்சொல்லி,
காதல், கவிதைகளை யாசித்து,
பரிவு, இரக்கம் எதிர்நோக்கி
முகத்தையே பார்த்திருந்தவைகளுக்கு,
கொஞ்சம் தண்ணீர் மட்டும் வழங்கப்பட்டது.

ஊஞ்சலில் வைத்து ஆட்டிவிடும் வேளையில்
தள்ளிவிட்டு சிரிக்கும்,
இருபுறமும் கூர்கொண்ட ஆயுதமாய் கொண்டவள்
கைகிழிக்கும்
சாத்தியங்களை அறிந்திருப்பதாய்ச்சொன்னாள் எங்கோபார்த்தபடி.

பசி இன்னும் கூடியதாய் கூச்சலிட்டு,
பேச விடாமல் சமைக்கத் தள்ளின.

மூடிய கலன்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது,
உப்பு, காரம் முதலியவை. தேடித்திறந்து
வகைக்கொன்றாய் கூட்டிக்குறைத்து சமைக்கவேண்டும்.

பொழுதுசென்றுகொண்டிருக்கிறது. உணவு இன்னும் தயாராகவில்லை.
மிதமாகத் தொடரும் தீயில் பக்குவப்பட்டுக்கொண்டிருக்கிறது.

வார்த்தைகள் களைத்து உறங்கிக்கொண்டிருக்கின்றன.
வடிந்த கண்ணீர்த் தடங்களை அவள் எட்டிப்பார்க்கவில்லை.

Tuesday 24 December 2013

விதிக்கப்பட்டவை...

            
                                
அந்த அறையில் எரிந்து கொண்டிருக்கும்
தீபத்திற்கு ஒப்பானது உண்மையின் வசீகரம்.
ஒற்றையாய் காரிருள் வென்றும் சலனமற்று,
இருத்தலை அமைதியாய் உணர்த்திக்கொண்டு.

அடுத்த நெருங்கிய சுற்றில்,
அதிர்ந்தெழுந்த உடலால்,
உணர்ந்தேதான் இருந்தது விட்டில்,
விதிக்கப்பட்டது விளைய இருப்பதை.

உணவிருந்தும் பசியை நீட்டிக்கும் போதை!
இன்னும் கொஞ்சம் சிறகடித்து சுழன்றது.
தொடர்ந்து எரிந்து கொண்டுதான் இருந்தது,
தீபம் மட்டும்.

Wednesday 11 December 2013

The First and the Best Programmer



    தினமும் காலையில் தூங்கி எழுந்ததும் நேரே அதன் முகத்தில்தான் சென்று விழிப்பேன். பசுஞ்சிவப்பாய் ஒரு வித்யாசமான வண்ணத்தில் இலைகள் துளிர்விட்டுக் கொண்டிருக்கும். அது ஒரு ரோஜாச்செடி. பிறந்த குழந்தையின் நகம்போல் புதிதாய் முளைக்கும் முட்கள் முதல் அதன் ஒவ்வொரு அணுவையும் ரசிப்பேன். அதை நான் தீவிரமாக காதலித்துக்கொண்டிருந்தேன் என்றே சொல்லலாம். இடது பக்கம் ஒரு இலைத்துளிர் பின் வலது பக்கம் ஒன்று என, அதன் வளரும் முறையில்(pattern) ஒரு ஒழுங்கு இருக்கும். திடீரென்று ஒருநாள் குண்டூசித்தலை முனை அளவு லேசாக அரும்புவிடும். பார்த்ததும் பரவசமாகிவிடும். இன்றுதான் பூ அரும்ப வேண்டும் என யார் சொல்லித்தந்தார்கள்? ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதா?

அப்போது நான் C++ ம் படித்துக்கொண்டிருந்த காலம். மனதில் ஒருபக்கம் Constructor, Destructor, Object என எல்லாவற்றையும் வியந்துகொண்டிருப்பேன். சட்டென்று ஒரு கணத்தில் எல்லாவற்றிற்கும் ஏதோ தொடர்பு இருப்பதுபோல் தோன்றியது. ஆம். அனைத்தும் திட்டமிடப்பட்டவை. எல்லாமே Programmed.!

முயற்சிகள் ஏதுமின்றி செயலற்று இருப்பதை ஊக்குவிக்கும் எண்ணத்தில் அல்ல, அந்த படைப்பாளியின் உயர்வைச்சொல்லவே, C++ கும் ரோஜாச்செடிக்கும் பிறந்த என் செல்லக்குழந்தை.


The First and the Best programmer

He wrote the code,
In each and every part of the object.
So that it behaves as He preferred.
As He is a perfect programmer,
He didn’t commit even a single mistake.
So that His programs never become failure.

The object in his program,
May not like the changes it has to undergo.
But He knows pretty well,
What has to be done for a good result.

Sometimes the object praises the programmer.
            What is the use?
            Whether it prays or not.
            Whether it obeys or not.
            Whether it is good or not.

Nothing does matter, as,
Nothing is in it’s hand. And
Everything is preplanned by Him. But
Unknowing this, the object boasts,
Anything can be done by it. Confidently.

Just He has given it a part to play.
It has to move as He drags.
It has to exist as He allows, and
It has to disappear when He destructs.
 




Wednesday 4 December 2013

தொடரும் யாசகங்கள்...


சாம்பல் காடுகள் எங்கும் பூக்கள் வீசும் கருகும் வாசம்.
இருளறியாப் புன்னகையோடு ஓநாய்கள் ஒலிக்கும் தேசிய கீதம்.
வாங்கப்பட்ட கனவுகளின் விலையாய் சுமை கூலி. அதுவும்,
மிச்சமின்றி விதைக்க வேண்டிய விளையாப் பயிர்.
வேண்டிய அமைதி நிலவுகிறது, கடும் யுத்தத்திற்கு பின்பான களமாய்.
வழியும் துளிகளில் தெரியும் எதிர்த் திசையில் சுழலும்
உலகின் பிம்பம், மாறவும் மாற்றவும் போவதில்லை.
இரவுப் பறவைகளின் திசையை அவைகளே தீர்மானிக்கும்
எனில் நாளையும் தொடரும் யாசகங்கள், கிழக்கு நோக்கியே.